மூதாட்டியிடம்  நகைபறிப்பு

கரூரில் மூதாட்டியிடம் 6 பவுன் நகையைப் பறித்துச் சென்ற அடையாளம் தெரியாத நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர். 

கரூரில் மூதாட்டியிடம் 6 பவுன் நகையைப் பறித்துச் சென்ற அடையாளம் தெரியாத நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர். 
கரூர் ராமானுஜம் நகரைச் சேர்ந்த பழனியப்பன்மனைவி முத்தம்மாள்(70). வியாழக்கிழமை இரவு வீட்டின் அருகே உள்ள கடைக்குச் 
சென்றுவிட்டு , மீண்டும் வீட்டை நோக்கி  முத்தம்மாள் நடந்துசென்றார்.
அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், முத்தம்மாள் அணிந்திருந்த 6 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டனர்.
இதுகுறித்து கரூர் நகர காவல்நிலையத்தினர் வழக்குப்பதிந்து அடையாளம் தெரியாத நபர்களை தேடி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com