கரூரில் மூதாட்டியிடம் 6 பவுன் நகையைப் பறித்துச் சென்ற அடையாளம் தெரியாத நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.
கரூர் ராமானுஜம் நகரைச் சேர்ந்த பழனியப்பன்மனைவி முத்தம்மாள்(70). வியாழக்கிழமை இரவு வீட்டின் அருகே உள்ள கடைக்குச்
சென்றுவிட்டு , மீண்டும் வீட்டை நோக்கி முத்தம்மாள் நடந்துசென்றார்.
அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், முத்தம்மாள் அணிந்திருந்த 6 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டனர்.
இதுகுறித்து கரூர் நகர காவல்நிலையத்தினர் வழக்குப்பதிந்து அடையாளம் தெரியாத நபர்களை தேடி வருகின்றனர்.