தனியார் பள்ளி வேன் மோதி பைக்கில் சென்ற விவசாயி சாவு

கரூரில் பைக் மீது தனியார் பள்ளி வேன் மோதியதில் விவசாயி உயிரிழந்தார். 

கரூரில் பைக் மீது தனியார் பள்ளி வேன் மோதியதில் விவசாயி உயிரிழந்தார். 
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அடுத்த கந்தம்பாளையத்தைச் சேர்ந்தவர் பொன்னுசாமி(55). விவசாயி. இவர் வியாழக்கிழமை மாலை தனது பைக்கில் கரூர் நோக்கி வந்துள்ளார். செம்மடை அடுத்த நாவல்நகர் பகுதியில் வந்தபோது எதிரே வந்த தனியார் பள்ளி வேன் பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பொன்னுசாமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து வாங்கல் போலீஸார் வழக்குப்பதிந்து பள்ளி வேன் ஓட்டுநர் நெரூர் காளிபாளையத்தைச் சேர்ந்த பெரியசாமி(60)என்பவரைக் கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com