மின்சாரம் பாய்ந்து செங்கல் சூளை தொழிலாளி சாவு

வேலாயுதம்பாளையம் அருகே மின்சாரம் பாய்ந்து செங்கல்சூளை தொழிலாளி உயிரிழந்தார். 

வேலாயுதம்பாளையம் அருகே மின்சாரம் பாய்ந்து செங்கல்சூளை தொழிலாளி உயிரிழந்தார். 
கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை அடுத்த கருப்பூரைச் சேர்ந்தவர் பரமசிவம் (36). இவர் தனது குடும்பத்தினருடன் தோட்டக்குறிச்சியில் உள்ள செங்கல்சூளையில் தங்கி வேலைப்பார்த்து வந்தனர். வெள்ளிக்கிழமை இரவு சூளையில் மண்ணை அள்ளுவதற்காக டியூப் லைட்டை மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளார். 
அப்போது ஈரக்கையால் சுவிட்ச்சை அணைத்தபோது மின்சாரம் பாய்ந்ததில், பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனையில் கொண்டு வந்தனர்.
 ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com