அடையாளம் தெரியாத வாகனம்  மோதி இளைஞர் சாவு

கரூரில் அடையாளம் தெரியாத வாகனம்  மோதியதில் இளைஞர் உயிரிழந்தார். 

கரூரில் அடையாளம் தெரியாத வாகனம்  மோதியதில் இளைஞர் உயிரிழந்தார். 
கரூர் அடுத்த புன்னம் பாலம்மாபுரத்தைச் சேர்ந்த வீரப்பன் மகன் சக்திவேல்(32). இவர் வியாழக்கிழமை பைக்கில் கரூர்-ஈரோடு சாலையில் உழைப்பாளி நகர் அருகே சென்ற போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த சக்திவேல் சம்பவ இடத்தில் இறந்தார்.
இதுகுறித்து கரூர் நகரப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com