மொபட் மீது கார் மோதல்: முதியவர் சாவு
By DIN | Published on : 11th September 2018 08:45 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
வேலாயுதம்பாளையம் அருகே மொபட் மீது கார் மோதியதில் முதியவர் உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம், கீழ்ஒரத்தை பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி(75). இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு மொபட்டில் கரூர்- சேலம் புறவழிச்சாலையில் சாலையில் அய்யம்பாளையம் பிரிவு பகுதியில் சென்றார். அப்போது எதிரே வந்த கார், மொபட் மீது மோதியதில் பலத்த காயமடைந்த முத்துசாமி நிகழ்விடத்தில் இறந்தார். இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய கார் ஓட்டுநரைத் தேடி வருகின்றனர்.