ஐயப்பசாமிக்கு 108 கலசாபிஷேகம்

கரூரில் ஐயப்ப சாமிக்கு சனிக்கிழமை நடைபெற்ற 108 கலசாபிஷேகம் பூஜையில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.


கரூரில் ஐயப்ப சாமிக்கு சனிக்கிழமை நடைபெற்ற 108 கலசாபிஷேகம் பூஜையில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு மாவட்ட அகில பாரதிய ஐயப்பதர்ம பிரசார சபா சார்பில் கரூரில் புஷ்பாஞ்சலி விழா வாசவி மகாலில் ஞாயிற்றுக்கிழை (செப்.16) நடைபெறுகிறது.
விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (செப்.14) மங்கள விநாயகர் வழிபாடு, சங்கல்பம், புண்யாகவாசனம், வேதிகாஅர்ச்சனை, கும்பப்பூஜை, சனிக்கிழமை காலை பூர்வாங்க, சூரிய கலை பூஜை, ஐயப்ப தர்ம சாஸ்தா மூல மந்த்ர ஜெபம், தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகளும், தொடர்ந்து, சுவாமி ஐயப்பனுக்கு சிறப்பு மகாஅபிஷேகம், 108 கலசாபிஷேகம் நடைபெற்றது. மாலையில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.ஏற்பாடுகளை அகில பாரதிய ஐயப்ப தர்ம பிரசார சபாவினர் செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com