கரூரில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் சாவு

கரூரில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் பரிதாபமாக இறந்தான்.


கரூரில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
கரூர் பசுபதிபாளையம் கங்கா நகரில் விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு இந்துமுன்னணி சார்பில் வைக்கப்பட்ட சிலையை வெள்ளிக்கிழமை இரவு ஆற்றில் கரைக்க டிராக்டரில் ஏற்றும் பணியில் அதே பகுதியைச் சேர்ந்த திவாகர்(20) உள்ளிட்டோர் ஈடுபட்டிருந்தனர். அப்போது டிராக்டரில் ரேடியோ வைத்து மின் இணைப்பு கொடுக்கும் பணியில் ஈடுபட்டபோது அதேபகுதியைச் சேர்ந்த மணிவண்ணன் மகன் மாயவன்(10) மின்வயரை தொட்டுள்ளான்.
அவன் மீது மின்சாரம் பாய்ந்ததில் நிகழ்விடத்தில் இறந்தான். இதுகுறித்து பசுபதிபாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து திவாகர், ரேடியோ மைக்செட் ஆபரேட்டர் வேலாயுதம் ஆகியோரைத் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com