மது விற்றதை போலீஸாருக்கு தெரிவித்த தொழிலாளியை தாக்கிய இருவரை போலீஸார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், வாங்கல் அடுத்த அச்சமாபுரம் ரெங்கநாதன்பேட்டையைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (42). இவர் அதே பகுதியைச் சேர்ந்த பாலுசாமி(47) என்பவர் அனுமதியின்றி மதுவிற்றதை போலீஸாருக்கு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பாலுசாமி, அவரது மகன் செல்வகுமார் (26), உறவினர் சிலம்பரசன்(32) ஆகியோர் சேர்ந்து திங்கள்கிழமை செந்தில்குமாரை தாக்கினராம். இதுதொடர்பாக செந்தில்குமார் அளித்த புகாரின்பேரில் வாங்கல் போலீஸார் வழக்குப்பதிந்து பாலுசாமி, சிலம்பரன் ஆகியோரைக் கைது செய்தனர். செல்வகுமாரைத் தேடி வருகின்றனர்.