மாட்டுவண்டியில் பைக் மோதி இளைஞர் சாவு

மாட்டுவண்டி மீது பைக் மோதியதில் பொறியியல் கல்லூரி மாணவர் இறந்தார்.


மாட்டுவண்டி மீது பைக் மோதியதில் பொறியியல் கல்லூரி மாணவர் இறந்தார்.
கரூர் மாவட்டம், உப்பிடமங்கலத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் லோக்நாத் (22). இவர் கரூர் அடுத்த புலியூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு எம்பிஏ படித்துவந்தார். இவர் தனது பைக்கில் திங்கள்கிழமை இரவு புலியூர்-உப்பிடமங்கலம் சாலையில் லிங்கத்தூர் பாலம் அருகே வந்தபோது திடீரென நிலைதடுமாறி மாட்டு வண்டி மீது மோதினார். இதில் படுகாயமடைந்த அவர் இறந்தார். வெள்ளியணை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com