ஜேடர்பாளையத்தில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்க வாக்குச் சீட்டுகளுடன் வந்தவர் தப்பியோடியதையடுத்து, அவரது இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
பரமத்தி வேலூர் வட்டம், ஜேடர்பாளையத்தில் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அதில், வாகனத்தினுள் பணம் மற்றும் வாக்குச் சீட்டுகள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர் பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடினார்.
இதையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, ஜேடர்பாளையம் போலீஸாரிடம் ஒப்படைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.