முதியவரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த ரௌடியைப் போலீஸார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி(56). இவர், சின்னதாராபுரம் பேருந்துநிறுத்தத்தில் சனிக்கிழமை இரவு நின்றுகொண்டிருந்தபோது, அங்கு வந்த பிரபல ரௌடியான அரவக்குறிச்சியை அடுத்த ராஜபுரத்தைச் சேர்ந்த செல்லப்பன் மகன் செந்தில்குமார்(40) என்பவர் பெரியசாமியிடம் கத்தியைக்காட்டி ரூ.100 பணம் பறித்துள்ளார்.
இதுதொடர்பாக பெரியசாமி அளித்த புகாரின்பேரில் சின்னதாராபுரம் போலீஸார் வழக்குப்பதிந்து செந்தில்குமாரைக் கைது செய்தனர்.