முதியவரிடம் கத்தியைகாட்டி பணம் பறித்த ரௌடி கைது

முதியவரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த ரௌடியைப் போலீஸார் கைது செய்தனர்.

முதியவரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த ரௌடியைப் போலீஸார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி(56). இவர், சின்னதாராபுரம் பேருந்துநிறுத்தத்தில் சனிக்கிழமை இரவு நின்றுகொண்டிருந்தபோது, அங்கு வந்த பிரபல ரௌடியான அரவக்குறிச்சியை அடுத்த ராஜபுரத்தைச் சேர்ந்த செல்லப்பன் மகன் செந்தில்குமார்(40) என்பவர் பெரியசாமியிடம் கத்தியைக்காட்டி ரூ.100 பணம் பறித்துள்ளார். 
இதுதொடர்பாக பெரியசாமி அளித்த புகாரின்பேரில் சின்னதாராபுரம் போலீஸார் வழக்குப்பதிந்து செந்தில்குமாரைக் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com