கரூரில் வீடு புகுந்து நகை திருடியவர் பிடிபட்டார்

கரூரில் வீடுபுகுந்து நகை திருடியவரை போலீஸார் கைது செய்தனர்.

கரூரில் வீடுபுகுந்து நகை திருடியவரை போலீஸார் கைது செய்தனர்.
கரூர் கிழக்கு ஆண்டாங்கோயில் பகுதியைச் சேர்ந்தவர் குமாரசாமி. இவரது மகள் அனிதா(32). திங்கள்கிழமை இரவு இவர்களது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து மர்ம நபர்  பீரோவை உடைத்து 3 பவுன் செயினை திருடியுள்ளார். 
இதைக் கண்ட அனிதா சத்தம் போட்டதால் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து மர்ம நபரை பிடித்து விசாரித்ததில் அவர் கரூர் ஆத்தூர் சமத்துவபுரத்தைச் சேர்ந்த நந்தகுமார்(42) எனத் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாரிடம் அவரை ஒப்படைத்தனர். போலீஸார் நந்தகுமாரை விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com