கரூரில் வீடுபுகுந்து நகை திருடியவரை போலீஸார் கைது செய்தனர்.
கரூர் கிழக்கு ஆண்டாங்கோயில் பகுதியைச் சேர்ந்தவர் குமாரசாமி. இவரது மகள் அனிதா(32). திங்கள்கிழமை இரவு இவர்களது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து மர்ம நபர் பீரோவை உடைத்து 3 பவுன் செயினை திருடியுள்ளார்.
இதைக் கண்ட அனிதா சத்தம் போட்டதால் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து மர்ம நபரை பிடித்து விசாரித்ததில் அவர் கரூர் ஆத்தூர் சமத்துவபுரத்தைச் சேர்ந்த நந்தகுமார்(42) எனத் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாரிடம் அவரை ஒப்படைத்தனர். போலீஸார் நந்தகுமாரை விசாரிக்கின்றனர்.