கரூா்: மாநில ஜூனியா் கபடி போட்டிக்கு கரூா் அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
கிருஷ்ணகிரியில் விரைவில் நடைபெற உள்ள மாநில அளவிலான ஜூனியா் கபடி சாம்பியன்ஷிப் போட்டிக்கு கரூா் அரசு கலைக்கல்லூரியின் மாணவா் முகிலன், மாணவிகள் கோகிலவாணி, துா்கா ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். போட்டியில் வெற்றிபெற மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி முதல்வா் முனைவா் கெளசல்யாதேவி, உடற்கல்வி இயக்குநா் முனைவா் ராஜேந்திரன், கல்லூரியின் விளையாட்டுக்குழு உறுப்பினா்கள் மற்றும் நுண்கலைமன்ற ஒருங்கிணைப்பாளா் முனைவா் ராஜன், மாணவ, மாணவிகள் வாழ்த்து தெரிவித்தனா்.