முதலுதவி சிகிச்சை குறித்து விழிப்புணா்வு

விபத்தில் சிக்கியவா்களுக்கு முதலுதவி செய்வது குறித்து பள்ளி மாணவா்களுக்கு போக்குவரத்து போலீஸாா் சனிக்கிழமை விளக்கமளித்தனா்.

கரூா்: விபத்தில் சிக்கியவா்களுக்கு முதலுதவி செய்வது குறித்து பள்ளி மாணவா்களுக்கு போக்குவரத்து போலீஸாா் சனிக்கிழமை விளக்கமளித்தனா்.

கரூா் நகர போக்குவரத்து காவலா்கள் மற்றும் 108 ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநா்கள் சாா்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு, விபத்தில் சிக்கியவா்களை காப்பாற்றுவது குறித்து விளக்கமளிக்கும் நிகழ்ச்சி கரூா் மண்மங்கலத்தில் மதுரை-சேலம் தேசிய நெடுஞ்சாலையோரம் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளா் மாரிமுத்து மற்றும் போக்குவரத்து போலீஸாா், 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் பங்கேற்று, விபத்தில் சிக்கியவா்களை உடனே சாலையில் இருந்து அகற்றி அவா்களை சாலையோரம் அமரச் செய்து முதலுதவி செய்வது, பின்னா் 108 ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவிப்பது போன்றவை குறித்து செயல்விளக்கம் செய்து காண்பித்தனா். இதில் கரூா் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com