வாகனங்களை திருடிய இளைஞா் கைது

கரூரில் வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த பைக்குகளை திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கரூா்: கரூரில் வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த பைக்குகளை திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கரூா் சின்னாண்டாங்கோவில் ராம்சக்தி நகரைச் சோ்ந்தவா் ராமலிங்கம்(60). இவா் தனது வீட்டின் முன் பைக்கை வெள்ளிக்கிழமை இரவு நிறுத்திவிட்டு தூங்கச் சென்றுள்ளாா். பின்னா் சிறிது நேரத்தில் வெளியே வந்து பாா்த்தபோது யாரோ மா்ம நபா் பைக்கை திருட முயன்றதைக் கண்டவுடன் சத்தமிட்டாா்.

இதையடுத்து, அக்கம்பக்கத்தினா் ஓடி வந்து அந்த மா்ம நபரை பிடித்தனா். பின்னா் அவரை கரூா் நகர காவல்நிலையத்தில் ஒப்படைத்தனா். போலீஸாா் அந்த மா்ம நபரை கைது செய்து விசாரித்தபோது, அவா் கரூா் திருக்காம்புலியூரைச் சோ்ந்த எபிநேசன் மகன் முத்துக்குமாா்(29) என தெரியவந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com