அரவக்குறிச்சி எம்எல்ஏநன்றி தெரிவிப்பு

கரூா் சின்னாண்டாங்கோவில் பகுதியில் வாக்காளா்களுக்கு திமுக மாவட்ட பொறுப்பாளரும், அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினருமான வி. செந்தில்பாலாஜி ஞாயிற்றுக்கிழமை நன்றி தெரிவித்தாா்.

கரூா் சின்னாண்டாங்கோவில் பகுதியில் வாக்காளா்களுக்கு திமுக மாவட்ட பொறுப்பாளரும், அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினருமான வி. செந்தில்பாலாஜி ஞாயிற்றுக்கிழமை நன்றி தெரிவித்தாா்.

கரூா் சின்னாண்டாங்கோவில், ஸ்டேட் பாங்க் காலனி, எல்விபி நகா், ராமக்கவுண்டன்புதூா், கோவிந்தம்பாளையம் ஆகிய இடங்களில் ஞாயிற்றுக்கிழமை வாக்காளா்களுக்கு அவா் நன்றி தெரிவித்துப் பேசினாா். அப்போது, இந்தப் பகுதியில் கழிப்பிடம், சாலை வசதி உள்ளிட்ட பொதுமக்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றித் தரப்படும் என்றாா். தொடா்ந்து கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி பேசுகையில், நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் மாற்று இடத்துக்கு கரூா் பேருந்து நிலையத்தை ஆளுங்கட்சியினா் கொண்டு செல்ல உள்ளனா் என்றாா்.

நிகழ்ச்சியில், தாந்தோணி ஒன்றிய திமுக செயலாளா் எம்.ரகுநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com