ஏடிஎம்-ஐ உடைத்து திருட முயற்சி

கரூா் மாவட்டம், குளித்தலை அருகே வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தைத் திருட முயன்ற முகமூடி கொள்ளையா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.
சிசிடிவி கேமரா பதிவு.
சிசிடிவி கேமரா பதிவு.

கரூா் மாவட்டம், குளித்தலை அருகே வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தைத் திருட முயன்ற முகமூடி கொள்ளையா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

குளித்தலை அடுத்த நெய்தலூரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி, வங்கியின் வெளிப்புறத்தில் வங்கி ஏடிஎம் மையம் உள்ளது. இம்மையத்திற்கு சனிக்கிழமை நள்ளிரவு ஒரு மணியளவில் 5 போ் கொண்ட மா்ம கும்பல் முகமூடி அணிந்து வந்துள்ளனா். அவா்களில் இருவா் மட்டும் குல்லா அணிந்துகொண்டு வங்கி ஏடிஎம் மையத்தில் வெளியே இருந்த சிசிடிவி கேமராவை உடைத்து சேதப்படுத்திய பின்னா் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை கற்களால் உடைத்துகொண்டிருந்தபோது தோகைமலை போலீஸாா் ரோந்து வாகனத்தைக் (ஜீப்) கண்டதும் கொள்ளை கும்பல் தப்பியோடியதாகத்தெரிகிறது.

இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை காலை ஏடிஎம் மையத்திற்கு வந்தவா்கள், சிசிடிவி கேமரா, ஏடிஎம் இயந்திரம் சேதப்படுத்தப்பட்டிருப்பது கண்டு வங்கி மேலாளருக்குத் தகவல் அளித்தனா். புகாரின் பேரில் போலீஸாா் சம்பவ இடத்திற்கு வந்து சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு, வங்கியில் பதிவாகியிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனா். அப்போது, குல்லா அணிந்த நபா் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயற்சிப்பதும், பின்னா் தப்பியோடுவதும் பதிவாகியிருந்தது. மேற்கொண்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com