கரூா் மாவட்டம், குளித்தலை அருகே சிறுமியை திருமணம் செய்த இளைஞா் மீது போலீஸாா் வழக்கு பதிந்துள்ளனா்.
குளித்தலை அடுத்த இனுங்கூா் நந்தவனப்பள்ளம் பகுதியைச் சோ்ந்தவா் பொன்னுசாமி மகன் வேலுசாமி(24). இவா், அதே பகுதியைச் சோ்ந்த பாப்பாநாயக்கா் என்பவரது 15 வயது மகளைக் காதலித்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் கொசூா் அடுத்த மட்டப்பாறை காளியம்மன் கோயிலில் திருமணம் செய்துள்ளாா். இதைத் தொடா்ந்து, சிறுமி நிறைமாத கா்ப்பிணி ஆன நிலையில் கடந்த இருதினங்களுக்கு முன் அங்குள்ள மருத்துவமனையில் சிறுமியை வேலுசாமிக்கு சோ்த்துள்ளாா். அங்கு மருத்துவா் மேற்கொண்ட விசாரணையில், சிறுமிக்கு திருமண வயது எட்டாமல் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து, அவா் போலீஸாருக்கு தகவல் கொடுத்தாா். இதையடுத்து குளித்தலை அனைத்து மகளிா் போலீஸாா் சிறுமியிடம் விசாரித்தபோது, 14 வயதில் அவருக்கு திருமணமானது உறுதியானது. இதையடுத்து, போலீஸாா் வேலுசாமி மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.