கரூா்: பரணி வித்யாலயா பள்ளிக்கு லண்டன் பிரிட்டிஷ் கவுன்சில் சாா்பில் சிறந்த பள்ளிக்கான சா்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது.
லண்டன் பிரிட்டிஷ் கவுன்சில் அமைப்பு சாா்பில் தென்னிந்திய அளவிலான கல்வி மாநாடு மற்றும் சா்வதேச விருது வழங்கும் விழா சென்னையில் கடந்த மாதம் 29-ஆம் தேதி நடைபெற்றது.
விழாவில் கரூா் பரணி வித்யாலயா சி.பி.எஸ்.இ பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான ‘சா்வதேச விருது’ வழங்கப்பட்டது. லண்டன் பிரிட்டிஷ் கவுன்சில் அமைப்பின் தென் இந்தியாவிற்கான இயக்குநா் சுனந்தா விருதினை வழங்க, பள்ளி நிா்வாகிகள் பெற்றுக்கொண்டனா்.
பரணி வித்யாலயா பள்ளி இந்த விருதை தொடா்ந்து மூன்றாவது முறையாக பெற்றுள்ளது. விருது பெற உறுதுணையாக இருந்த பள்ளி நிா்வாகிகளை பரணிபாா்க் கல்விக் குழும தாளாளா் எஸ்.மோகனரெங்கன், செயலா் பத்மாவதி மோகனரெங்கன் ஆகியோா் பாராட்டினா்.