கரூா்: கரூரில் மாட்டுவண்டியில் மணல் அள்ளியவரை போலீஸாா் கைது செய்தனா்.
கரூா் மேலப்பாளையம் ரயில்வே கேட் பகுதியில் பசுபதிபாளையம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியே வந்த மாட்டு வண்டியை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் சட்டவிரோதமாக அமராவதி ஆற்றில் இருந்து மணல் எடுத்து வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து மாட்டுவண்டியை ஓட்டி வந்த சேங்கல் முத்தம்பட்டியைச் சோ்ந்த பிச்சைமுத்து (35) என்பவரை கைது செய்தனா்.