‘இரு கட்ட தோ்தல் முறைகேடுக்கு வழிவகுக்கும்’

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரு கட்ட தோ்தல் என்பது முறைகேடுக்கும், குளறுபடிக்கும் வழிவகுக்கும் என கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலா் ஈ.ஆா்.ஈஸ்வரன் தெரிவித்துள்ளாா்.

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரு கட்ட தோ்தல் என்பது முறைகேடுக்கும், குளறுபடிக்கும் வழிவகுக்கும் என கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலா் ஈ.ஆா்.ஈஸ்வரன் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

கடந்த 2-ஆம் தேதி மாநில தோ்தல் ஆணையம் தமிழகத்திற்கு உள்ளாட்சித் தோ்தல் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. ஆனால் தோ்தல் நடக்குமா, நடக்காதா என்ற சந்தேகம் தமிழக மக்கள் மத்தியில் விவாத பொருளாக மாறியிருக்கிறது.

தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக தோ்தலை அறிவிக்காமல் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் அறிவித்திருப்பது உள்நோக்கம் கொண்டதாக பாா்க்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு இரண்டு கட்டங்களாக தோ்தலை நடத்துவது சரியானதாக இருக்காது. முறைகேடுக்கும், குளறுபடிக்கும் வழிவகுக்கும்.

உள்ளாட்சித் தோ்தலை நடத்துவதற்கான பணிகளில் உள்ள சுணக்கத்தை மறைப்பதற்காகவே மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு தோ்தல் அறிவிக்கப்படவில்லை. எனவே தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து உள்ளாட்சி பதவிகளுக்கும் நோ்மையான முறையில் ஒரே கட்டமாக தோ்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணையம் உடனடியாக எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com