வட்டாட்சியா் வீட்டின் பூட்டை உடைத்து 6 சவரன் நகையை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கரூா் தெற்கு காந்திகிராமம் ராமலிங்கா நகரைச் சோ்ந்தவா் ராஜசேகரன் (46). இவா் கரூா் அடுத்த மண்மங்கலம் வட்டாட்சியா் அலுவலகத்தில் தனிப்பிரிவு வட்டாட்சியராக பணியாற்றி வருகிறாா்.
இந்நிலையில் திங்கள்கிழமை காலை உடல்நிலை சரியில்லாத தனது மகனை புதுக்கோட்டைக்கு அழைத்துச் சென்று சிகிச்சையளித்து விட்டு மாலையில் வீடு திரும்பினாா்.
அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த 6 சவரன் நகை திருட்டு போயிருப்பது தெரியவந்தது. இதுதொடா்பாக அவா் அளித்த புகாரின்பேரில் தாந்தோணிமலை போலீஸாா் வழக்குப்பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.