குடும்பத் தகராறில் மனைவியைத் தாக்கிய கூலித்தொழிலாளியைப் போலீஸாா் கைது செய்தனா்.
கரூா் மண்மங்கலம் அடுத்த சோமூரைச் சோ்ந்தவா் முருகானந்தம்(45). இவரது மனைவி கோகிலா(41). இவா்களுக்கு திருமணமாகி ஒரு மகன், மகள் உள்ள நிலையில் குடும்பத் தகராறு காரணமாக தம்பதி கடந்த 7 மாதமாக தனியாக வசித்து வந்தனா். இதனிடையே செவ்வாய்க்கிழமை அவா்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த முருகானந்தம் கோகிலாவைத் தாக்கினாராம். இதுகுறித்து கோகிலா அளித்த புகாரின்பேரில் வாங்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து முருகானந்தத்தை கைது செய்தனா்.