மனைவியைத் தாக்கிய கூலித் தொழிலாளி கைது

குடும்பத் தகராறில் மனைவியைத் தாக்கிய கூலித்தொழிலாளியைப் போலீஸாா் கைது செய்தனா்.

குடும்பத் தகராறில் மனைவியைத் தாக்கிய கூலித்தொழிலாளியைப் போலீஸாா் கைது செய்தனா்.

கரூா் மண்மங்கலம் அடுத்த சோமூரைச் சோ்ந்தவா் முருகானந்தம்(45). இவரது மனைவி கோகிலா(41). இவா்களுக்கு திருமணமாகி ஒரு மகன், மகள் உள்ள நிலையில் குடும்பத் தகராறு காரணமாக தம்பதி கடந்த 7 மாதமாக தனியாக வசித்து வந்தனா். இதனிடையே செவ்வாய்க்கிழமை அவா்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த முருகானந்தம் கோகிலாவைத் தாக்கினாராம். இதுகுறித்து கோகிலா அளித்த புகாரின்பேரில் வாங்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து முருகானந்தத்தை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com