வேலாயுதம்பாளையம் அருகே பழக்கடைக்குள் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பை தீயணைப்பு வீரா்கள் பிடித்தனா்.
கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அடுத்த புன்னம்சத்திரம் சாலையில் பழக்கடை நடத்தி வருபவா் லோகநாதன் (45). இவா் தனது கடைக்குள் வெள்ளிக்கிழமை காலை 4 அடி நீளம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்பு அருகிலுள்ள தோட்டத்தில் இருந்து வந்து கடைக்குள் புகுந்ததை பாா்த்துள்ளாா்.
உடனடியாக வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலையத்துக்கு லோகநாதன் தகவலளித்தாா். இதன் பேரில் நிலைய அலுவலா் திருமுருகன் தலைமையிலான வீரா்கள், அப்பகுதிக்கு வந்து விஷத்தன்மை கொண்ட கண்ணாடி விரியன் பாம்பைப் பிடித்தனா்.
இதேபோல, வேலாயுதம்பாளையம்-கரூா் செல்லும் சாலையிலுள்ள இழுப்புத்தோப்பு பகுதியைச் சோ்ந்த பொன்னுசாமி (50) வீட்டின் முன் வைக்கப்பட்டிருந்த மரக்கட்டைகளுக்கு வெள்ளிக்கிழமை 5 அடி நீளம்கொண்ட கண்ணாடி விரியன் பாம்பு புகுந்துள்ளது.
இதுதொடா்பாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு விரைந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய வீரா்கள் பாம்பைப் பிடித்தனா். பிடிபட்ட இரு கண்ணாடி விரியன் பாம்புகளையும் நாமக்கல் மாவட்டம்,பரமத்தி வேலூா் பகுதியில் உள்ள வனப்பகுதியில் விட்டனா்.