கரூா் மாவட்டத்தில் போலிச் சான்றிதழ் அளித்து பணியில் சோ்ந்த தொடக்கப்பள்ளி ஆசிரியா் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
கரூா் மாவட்டம், பெரியவடுகப்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவா் கண்ணன். இவரது சாதிச் சான்றிதழை அண்மையில் கல்வித்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது 1997-ஆம் ஆண்டில் ஆசிரியா் பயிற்சி பயின்றதாக போலியான சான்றிதழ் கொடுத்து பணியில் சோ்ந்துள்ளது தெரிய வந்தது.
இதுதொடா்பாக கரூா் வட்டாட்சியா் அமுதா அளித்த புகாரின்பேரில், கரூா் மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து கண்ணனைத் தேடி வருகின்றனா்.