கரூரில் வீரத்தமிழர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சி தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
கட்சியின் நிறுவனர் தலைவர் வீர மங்கேஸ்கர் என்கிற சித்தார்த் தலைமை வகித்தார். புதிய கட்சியை மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநிலத் தலைமை செயற்குழு உறுப்பினர் அகரமுத்து மற்றும் ஜான் பாஸ்கர், துரைபெஞ்சமின் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.
விழாவில் அனைவருக்கும் தரமான மருத்துவ வசதி வேண்டும், சமமான கல்வி கிடைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கட்சியினர் திரளாக பங்கேற்றனர்.