சிஐடியு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கரூரில் சிஐடியு தொழிற்சங்கத்தினர் வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூரில் சிஐடியு தொழிற்சங்கத்தினர் வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேட்டூர் கெம்பிளாஸ்ட் ஆலையில் 99 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்தும், கோவை பிரிக்கால் ஆலையில் 297 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும், சிவகாசியில் பட்டாசு ஆலைகள் மூடப்பட்டதால் 8 லட்சம் பேர் வேலையிழந்ததைக் கண்டித்தும் கரூரில் சிஐடியு தொழிற்சங்கத்தினர் வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் பேருந்துநிலைய ரவுண்டானா ஆர்எம்எஸ்அலுவலகம் முன் நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் ஜி.ஜீவானந்தம் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாவட்டச் செயலர் சி. முருகேசன், நிர்வாகிகள் கந்தசாமி, ராஜாமுகமது, மதியழகன் உள்ளிட்டோர் பேசினர். இதில் தொழிற்சங்கத்தினர் திரளாக பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com