பேருந்துநிலையத்தில் இளைஞரிடம் மடிக்கணினி திருட்டு

கரூர் பேருந்துநிலையத்தில் இளைஞரிடம்  மடிக்கணினி திருடிச் சென்ற அடையாளம் தெரியாத நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

கரூர் பேருந்துநிலையத்தில் இளைஞரிடம்  மடிக்கணினி திருடிச் சென்ற அடையாளம் தெரியாத நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
 கரூர் திருமாநிலையூரைச் சேர்ந்த மாணிக்கம் மகன் நிஷாந்த்(26). இவர் கடந்த மாதம் 21-ம்தேதி கரூர் பேருந்துநிலையத்தில் தனது
 மடிக்கணினி அடங்கிய பையுடன், இருசக்கர வாகனத்தில் நின்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனம் மீது பையை வைத்துவிட்டு அங்குள்ள தேநீரகத்துக்குச் சென்றார்.
பின்னர் வந்து பார்த்த போது, மடிக்கணினி இருந்த பையை காணவில்லை.  
இதுகுறித்து  கரூர் நகர காவல்நிலையத்தில் வியாழக்கிழமை புகார் செய்தார். 
இந்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப்பதிந்து மடிக்கணினியைத் திருடிச் சென்ற அடையாளம் தெரியாத நபர்களைத் தேடி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com