தடுப்புச்சுவர் மீது ஆட்டோ மோதல்: ஓட்டுநர் சாவு

கரூரில் சாலையின் தடுப்புச்சுவர் மீது ஆட்டோ மோதியில் ஆட்டோ ஓட்டுநர் இறந்தார்.

கரூரில் சாலையின் தடுப்புச்சுவர் மீது ஆட்டோ மோதியில் ஆட்டோ ஓட்டுநர் இறந்தார்.
கரூர் கிட்டுத்தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (47), ஆட்டோ ஓட்டுநர். இவர் வெள்ளிக்கிழமை இரவு ஆட்டோவை ஓட்டிக்கொண்டு கரூர் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். பின்னர் வீட்டுக்கு கரூர்-கோவை சாலையில் வந்தபோது திடீரென ஆட்டோ நிலைத்தடுமாறி அங்குள்ள சாலை தடுப்புச்சுவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் இறந்தார். கரூர் நகர காவல்நிலையத்தினர் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com