கரூரில் சாலையின் தடுப்புச்சுவர் மீது ஆட்டோ மோதியில் ஆட்டோ ஓட்டுநர் இறந்தார்.
கரூர் கிட்டுத்தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (47), ஆட்டோ ஓட்டுநர். இவர் வெள்ளிக்கிழமை இரவு ஆட்டோவை ஓட்டிக்கொண்டு கரூர் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். பின்னர் வீட்டுக்கு கரூர்-கோவை சாலையில் வந்தபோது திடீரென ஆட்டோ நிலைத்தடுமாறி அங்குள்ள சாலை தடுப்புச்சுவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் இறந்தார். கரூர் நகர காவல்நிலையத்தினர் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.