மாசில்லா போகி கொண்டாட மாணவர்கள் உறுதியேற்பு

புகையில்லா போகிப்பண்டிகை கொண்டாட அரசு பள்ளி மாணவர்கள் உறுதிமொழியேற்றனர்.


புகையில்லா போகிப்பண்டிகை கொண்டாட அரசு பள்ளி மாணவர்கள் உறுதிமொழியேற்றனர்.
கரூர் மாவட்டம் க. பரமத்தி ஒன்றியம் கார்வழியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் பொங்கல் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவில் பள்ளி மாணவ, மாணவிகள் மாசில்லா போகிப்பண்டிகை கொண்டாட தலைமை ஆசிரியர் வாசுதேவன் தலைமையில் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
நிறைவில் ஆசிரியர் தங்கராஜ் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com