வீட்டுக்குள் புகுந்த விஷப்பாம்பு சிக்கியது

வேலாயுதம்பாளையத்தில் வீட்டுக்குள் புகுந்த விஷப்பாம்பு சிக்கியது.


வேலாயுதம்பாளையத்தில் வீட்டுக்குள் புகுந்த விஷப்பாம்பு சிக்கியது.
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் பசுபதிநகரைச் சேர்ந்தவர் கண்ணகி (50). இவர் அதே பகுதியில் கட்டிக் கொண்டிருக்கும் வீட்டுக்குள் சுமார் 5 அடி நீளமுள்ள கட்டுவிரியன் பாம்பு சனிக்கிழமை காலை புகுந்தது. 
இதைக் கண்ட கண்ணகி வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலையத்தினருக்கு அளித்த தகவலின்பேரில் வந்த நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் பாம்பை பிடித்து பரமத்தி வேலூர் பகுதியில் உள்ள வனப்பகுதியில் விட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com