கரூரில் வீட்டின் பூட்டை உடைத்து 12.5 பவுன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
கரூர் தாந்தோணிமலையை அடுத்த காளியப்பனூரைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (62). இவர், ஞாயிற்றுக்கிழமை இரவு அதே பகுதியில் உள்ள தனது உறவினர் இறந்ததால் குடும்பத்தினருடன் அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார். பின்னர் மீண்டும் நள்ளிரவில் வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே பீரோவில் இருந்த 12.5 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. புகாரின் பேரில் தாந்தோணிமலை போலீஸார் வழக்குப்பதிந்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.