முதியவரை கற்களால் தாக்கிய இளைஞர் கைது

மதுபோதையில் முதியவரை கற்களால் தாக்கிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.


மதுபோதையில் முதியவரை கற்களால் தாக்கிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், குளித்தலையை அடுத்த கரியாம்பட்டியைச் சேர்ந்தவர் தங்கராசு (61). இவர், வெள்ளிக்கிழமை இரவு வீட்டின் முன் நின்றுகொண்டிருந்தபோது அதேபகுதியைச் சேர்ந்த சிவா மகன் விக்னேஷ் (22), பழனிவேல் மகன் அண்ணாதுரை (26) ஆகியோர் மதுபோதையில் தண்ணீர் கேட்டுள்ளனர். 
இதற்கு தங்கராசு தர மறுக்கவே, அங்கு கிடந்த கற்களால் முதியவரைத் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த அவர் மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
இதுகுறித்து தோகைமலை போலீஸார் வழக்குப்பதிந்து அண்ணாதுரைக் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள விக்னேஷைத் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com