துபையில் அண்மையில் நடைபெற்ற இரண்டாவது க்ஷிபாசா சர்வதேச பாரா பேட்மின்டன் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று வென்ற கரூர் பரணி வித்யாலயா பள்ளி மாணவி ரக்சனா சிவகுமார் புதன்கிழமை பாராட்டப்பட்டார்.
சர்வதேச போட்டியில் முதல் 10 இடங்களுக்குள் வந்து இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்த மாணவிக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. பரணி பார்க் கல்வி குழுமத் தாளாளர் எஸ். மோகனரெங்கன், செயலாளர் பத்மாவதி மோகனரெங்கன், முதன்மை முதல்வர் முனைவர் சொ. ராமசுப்ரமணியன், பரணி வித்யாலயா முதல்வர் எஸ். சுதாதேவி, துணை முதல்வர் ஆர். பிரியா, நிர்வாக அலுவலர் எம். சுரேஷ் மற்றும் ஆசிரியர்கள் மாணவியை பாராட்டினர்.
மாணவி ரக்சனா கடந்தாண்டு தேசியளவில் நடைபெற்ற பாரா பேட்மிண்டன் போட்டிகளில் வெள்ளி வென்று தமிழக ஆளுநரால் பாராட்டப்பட்டவர்.