வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 14) மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு நுகர்வோருக்கும் மறுநிரப்பு எரிவாயு உருளைகள் வழங்குவதில் காணப்படும் குறைகள், நுகர்வோர் பதிவு செய்த குறைகளின் மீது முகவர்கள் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக வரப்பெறும் புகார்களின் மீது நடவடிக்கை மேற்கொண்டு எண்ணெய் நிறுவனங்களின் விதிகளுக்குட்பட்டு எரிவாயு உருளை விநியோகத்தை சீர்படுத்தும் வகையில் இந்தக் கூட்டம் நடக்கிறது.
ஆட்சியரகக் கூட்டரங்கில் மாலை 4 மணிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ச. சூர்யபிரகாஷ் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், மாவட்ட எரிவாயு ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பதால் எரிவாயு நுகர்வோர் பங்கேற்று, எரிவாயு விநியோக குறைகள் தொடர்பான புகார்களைத் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் தெரிவித்தார்.