பைக் மீது டாரஸ் லாரி மோதி தொழிலாளி இறந்தார்.
கரூர் ராயனூர் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் மூர்த்தி (41), தொழிலாளி. இவர் செவ்வாய்க்கிழமை இரவு கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தனது பைக்கில் வெங்கக்கல்பட்டி மேம்பாலத்தில் சென்றபோது எதிரே வந்த டாரஸ் லாரி மோதி இறந்தார். இதுகுறித்து தாந்தோணிமலை போலீஸார் வழக்குப்பதிந்து டாரஸ் லாரி ஓட்டுநர் திருச்சி மாவட்டம், துறையூர் சங்கனிப்பட்டியைச் சேர்ந்த ஜோதிவேலை (51) தேடுகிறார்கள்.