பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த இரு இளைஞர்களைப் போலீஸார் கைது செய்தனர்.
கரூரை அடுத்த அத்திப்பாளையம் மேட்டுக்கடை காலனியைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி சம்பூரணம் (40). இவர் புதன்கிழமை இரவு மேட்டுக்கடை காலனி பஜாரில் சென்றபோது பின்னால் வந்த அவரது உறவினர்கள் அதே பகுதியைச் சேர்ந்த பழனிசாமி மகன் பிரதாப் (30), செல்வா நகரைச் சேர்ந்த பழனிசாமி மகன் கதிர்வேல்(27) ஆகியோர் அவரை கீழே தள்ளியுள்ளனர். இதனால் இருவரையும் சம்பூரணம் திட்டினாராம். இதில் ஆத்திரமடைந்த பிரதாப், கதிர்வேல் கொலை செய்துவிடுவதாக சம்பூரணத்தை மிரட்டினார்களாம். இதுதொடர்பாக சம்பூரணம் அளித்த புகாரின்பேரில் க.பரமத்தி போலீஸார் வழக்கு பதிந்து பிரதாப், கதிர்வேல் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.