சேரன் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

வெண்ணைமலை சேரன் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 


கரூர்: வெண்ணைமலை சேரன் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
முகாமிற்கு, பள்ளி தாளாளர் பிஎம்கே. பாண்டியன் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் வி. பழனியப்பன் வரவேற்றார். நிர்வாகி கே.பெரியசாமி, ஆலோசகர் பி. செல்வதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  முகாமில், சிறப்பு விருந்தினராக போக்குவரத்து காவல் துறை ஆய்வாளர் சம்பத் பாலன் பங்கேற்று, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்தும், தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்தும், சாலை பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிப்பது குறித்தும் விரிவாக பேசினார்.  தொடர்ந்து பள்ளி முதல்வர் வி.பழனியப்பன் மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து உறுதிமொழியை வாசிக்க, அவற்றை மாணவ, மாணவிகள் ஏற்றுக்கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com