மத்திய அரசின் 2020-ஆம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருதுபெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட விளையாட்டு அலுவலர் தே.சாந்தி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், கல்வி, தொழில்நுட்பம், சமூக நலன், பொதுப்பணிகள், தொழில் மற்றும் இதர பிரிவுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் அசாதாரணமான பணிகள் ஆற்றியவர்களுக்கு வரும் 2020-ஆம் ஆண்டு நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் பத்மஸ்ரீ விருதுகள் வழங்க அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விருதுகள் தொழில், இனம், உத்தியோகம், பாலினம் ஆகியவற்றிற்கு வித்தியாசமின்றி வழங்கப்படுகிறது. மேலும் விவரங்கள் அறிய www.padmaawards.gov.in என்ற இணைய தளத்திலிருந்து விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்து வரும் 20-ஆம் தேதிக்குள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், கரூர் மாவட்டம் என்றமுகவரிக்கு தகுதியுள்ளவர்கள் அனுப்பிவைக்க வேண்டும்.