கரூர் மாவட்ட நூலகத்தில் குரூப்-4 தேர்வுக்கு இலவசப் பயிற்சி

கரூர் மாவட்ட மைய நூலகம் சார்பில் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.

கரூர் மாவட்ட மைய நூலகம் சார்பில் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.
இதுதொடர்பாக நூலகர் செ.செ.சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 மற்றும் விஏஓ போட்டித்தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் ஜூலை மாதம் முதல் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறவுள்ளது. 
இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் மாவட்ட மைய நூலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.  சிறந்த வல்லுநர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. 
எளிய முறையில் கற்றுக்கொள்ளுதல் மற்றும் ஞாபகம் வைத்திருத்தல் ஆகியவற்றிற்கு எளிய வழிகளைக் கூறுதல், தேர்விற்குத் தேவையான பாடங்கள் மற்றும் பகுதிகளைக் கண்டறிய வைக்கும் திறனை மேம்படுத்துதல், தேர்வுகளுக்கு ஏற்ப தற்கால நிகழ்வுளைக் கண்டறிந்து படித்தல், பாடவாரியாக அலகுத் தேர்வுகள், திருப்புதல் தேர்வு,  பயிற்சித் தேர்வுகள் கொள்குறி முறையில் தேர்வுத்தாளில் நடத்தப்பட உள்ளது. மேலும் தேர்வில் வெற்றி பெற்ற சாதனையாளர்களுடன் கலந்துரையாடல் போன்றவை நடக்க உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க ஜூலை 4-ஆம் தேதி கடைசி நாள் எனத் தெரிவித்துள்ளார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com