பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தார்.
கரூர் வெங்கமேடு குளத்துப்பாளையத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம்(49). தொழிலாளி. இவர் கடந்த 19-ஆம் தேதி இரவு தனது மோட்டார் சைக்கிளில் சேலம் - மதுரை புறவழிச்சாலையில் ரயில்வே மேம்பாலப் பகுதியில் சென்றபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த முருகானந்தத்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் அங்கு சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை இரவு இறந்தார். இதுகுறித்து வெங்கமேடு போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.