பொள்ளாச்சி பாலியல் வன்முறை சம்பவத்தைக் கண்டித்து, கரூர் மற்றும் குளித்தலையில் மார்க்சிஸ்ட் கம்யூ.கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா ஆர்எம்எஸ் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாவட்டச் செயலர் கந்தசாமி தலைமை வகித்தார். நிர்வாகிகள் ஜீவானந்தம், ஜோதிபாசு, சக்திவேல், முருகேசன், சண்முகம், கா.கந்தசாமி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
குளித்தலை காந்தி சிலை முன்பு, மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி ஒன்றியச் செயலர் இளங்கோவன் தலைமையில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.