மாவட்டத்தில் 1.86 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி

கரூர் மாவட்டத்தில் 1.86 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன்.

கரூர் மாவட்டத்தில் 1.86 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன்.
வெள்ளியணை அருகிலுள்ள செல்லாண்டிப்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், 16 ஆவது சுற்றாக கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணியைத் தொடக்கி வைத்த பின்னர், அவர் மேலும் கூறியது:
மாவட்டத்திலுள்ள அனைத்து பசு மற்றும் எருமைகளுக்கு, ஆண்டுக்கு இருமுறையாக மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை 15 சுற்றுகள் நிறைவடைந்துள்ளன.
இதைத் தொடர்ந்து, 16 ஆவது சுற்றாக தடுப்பூசி போடும் பணி மார்ச் 15ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 4 ஆம் தேதி வரை நடைபெறஉள்ளது. மாவட்டத்தில் 1,86,550 கால்நடைகளுக்குத் தடுப்பூசி போடதிட்டமிட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிக்கு 1.91 லட்சம் மருந்துகள், சிரிஞ்சுகள், ஊசிகள் கொள்முதல் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் உள்ள கால்நடைகளுக்கு 100 சதவிகிதம் தடுப்பூசி போட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விடுபட்ட கால்நடைகளுக்கு ஏப்.5-ம்தேதி முதல் 11-ம்தேதி வரை தடுப்பூசி போடப்படும் என்றார் ஆட்சியர்.
நிகழ்வில், கால்நடைப் பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மருத்துவர் கோபால்சுவாமி, துணை இயக்குநர் மணிமாறன், உதவி மருத்துவர்கள் மோகன்ராஜ்,  ஜெகதீசன், ரேவதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com