சிந்தாமணிப்பட்டி அருகே மொபெட் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கூலித்தொழிலாளி உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம் கடவூரையடுத்த குருணிகுளத்துப்பட்டியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி மோகன்ராஜ்(36). வியாழக்கிழமை இரவு தனது மொபெட்டில் பாளையம்-தோகைமலை சாலையில் சீதப்பட்டி என்ற இடத்தில் மோகன்ராஜ் சென்றபோது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார். தோகைமலை போலீஸார் வழக்குப்பதிந்து
விசாரிக்கின்றனர்.