ஆர்ப்பாட்டம்: மார்க்சிஸ்ட்   கம்யூ. நிர்வாகிகள் மீது வழக்கு

பொள்ளாச்சி சம்பவத்தைக் கண்டித்து குளித்தலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூ. நிர்வாகிகள் மீது போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர். 


பொள்ளாச்சி சம்பவத்தைக் கண்டித்து குளித்தலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூ. நிர்வாகிகள் மீது போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர். 
        பொள்ளாச்சியில் பாலியல் வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட திருநாவுக்கரசு உள்ளிட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என கரூர் மாவட்டம் குளித்தலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒன்றியச் செயலாளர் இளங்கோவன்(58) என்பவர் தலைமையில் வெள்ளிக்கிழமை மாலை காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
இந்த ஆர்ப்பாட்டம் தடையை மீறி ஈடுபட்டதாக ஒன்றியச் செயலாளர் இளங்கோவன் உள்ளிட்ட 21 பேர் மீது குளித்தலை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com