கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே நோய்க் கொடுமையால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த சரவணபுரத்தைச் சேர்ந்தவர் துரைராஜ்(67). தொழிலாளி. இவர், கடந்த சில ஆண்டுகளாக சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். நோய்க்கு பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகாததால் வாழ்வில் விரக்தியடைந்த அவர் வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து லாலாப்பேட்டை போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.