மனைவியிடம் தகராறில் ஈடுபட்ட கணவர் உள்பட உறவினர்கள் 5 பேர் மீது போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த கணக்குப்புலியூரைச் சேர்ந்தவர் மருதமுத்து (42). இவரது மனைவி ஜெயா(38). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள், ஓர் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறில் கடந்த ஓராண்டாக ஜெயா கணவரிடம் இருந்து பிரிந்து பிள்ளைகளுடன் அதே பகுதியில் வசித்து வருகிறாராம்.
இதனிடையே சனிக்கிழமை இரவு மருதமுத்து, அவரது தாய் சிறுமாயி, தங்கை சித்ரா, தம்பி ராஜா, மருதமுத்துவின் மகள் சங்கீதா ஆகியோருடன் ஜெயா வீட்டுக்குச் சென்று ஜெயாவை வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் தகாத வார்த்தையால் ஜெயாவை அனைவரும் திட்டினார்களாம். இதுதொடர்பாக ஜெயா அளித்த புகாரின்பேரில் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் மருதமுத்து உள்ளிட்ட 5 பேர் மீதும் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.