கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகிலுள்ள சின்னசேங்கலைச் சேர்ந்தவர் காளிமுத்து (31). இவரது மனைவி கனகவள்ளி (25). இவர்களுக்கு குழந்தை இல்லை.
காளிமுத்துவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த மகேசுவரிக்கும் தொடர்பு இருப்பதையறிந்த கனகவள்ளி அதை கண்டித்துள்ளார். ஆனால் அவர் கேட்கவில்லை இதனால் விரக்தியடைந்த கனகவள்ளி வியாழக்கிழமை இரவு தைராய்டு மாத்திரைகளை அதிகளவில் தின்று தற்கொலைக்கு முயன்று மயங்கிக் கிடந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் வழக்குப்பதிந்து, காளிமுத்து, மகேசுவரியைக் கைது செய்தனர்.