கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி போலீஸார் சனிக்கிழமை இரவு அரவக்குறிச்சி அடுத்த மலையம்பட்டி பிரிவில் வாகனச் சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது அவ்வழியே வந்த வேனை மடக்கியபோது, வேனில் வந்தவர்கள் திடீரென வேனை நிறுத்திவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டனர். இதையடுத்து போலீஸார் வேனைச் சோதனை செய்தபோது அதில் மணல் கடத்திவந்தது தெரியவந்தது. போலீஸார் விசாரித்து வருகின்றனர்.