துளசிக்கொடும்பு கரூர் சரஸ்வதி வித்யாலயா பள்ளி முழு தேர்ச்சி

பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் துளசிக்கொடும்பு கரூர் சரஸ்வதி வித்யாலயா பள்ளி மாணவர்கள் முழுத் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் துளசிக்கொடும்பு கரூர் சரஸ்வதி வித்யாலயா பள்ளி மாணவர்கள் முழுத் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஜெகதாபி துளசிக்கொடும்பில் செயல்படும் இப்பள்ளி தொடர்ந்து 9-ம் ஆண்டாக 10-ம் அரசு பொதுத்தேர்வில் முழுத் தேர்ச்சி பெற்றது. தேர்வு எழுதிய 263 மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர். 
கணிதப் பாடத்தில் 4 பேரும், அறிவியல், சமூக அறிவியல் பாடத்தில் தலா ஒரு மாணவரும் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளையும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த ஆசிரிய, ஆசிரியைகளையும் பள்ளியின் தலைவர் கனகராஜ், தாளாளர் பெரியசாமி, பொருளாளர் முத்துசாமி, செயலர் ஜெயப்பிரகாசம், பள்ளி தலைமை ஆசிரியர் பத்மநாபன் மற்றும் பள்ளி நிர்வாகிகள் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com